மின்சாரத் தடையால் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சிக்கல்.!
திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது இன்றையதினம், அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் கூட்டத்தை சிறிது நேரம் இடைநிறுத்தி வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் மின்சாரம் கிடைத்த நிலையில் கூட்டமானது தொடரப்பட்டது.