உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

சாய்ந்தமருதில் பெண்களுக்கான நவீன சமையற்கலை செயலமர்வு

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
56 பார்வைகள்

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குள் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கோடு, எடின்பரோ (Edinborough) நிறுவனத்தின் அனுசரணையுடன் “பல் சுவை வசந்தம்” இலவச சமையற்கலை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு சனிக்கிழமை  (12) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி திட்டப் பிரிவின் ஏற்பாட்டில், சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை ஊவா சமூக வானொலி ஒலிபரப்பாளர் றமீஸ் சிறப்பாக நெறிப்படுத்தினார்.

இச்செயலமர்வில் எடின்பரோ நிறுவனத்தின் பிரபல சமையற்கலை நிபுணர் எம். றியாஸ் வளவாளராகக் கலந்துகொண்டு, தற்காலப் போக்குக்கு ஏற்ப நவீன சமையற்கலை நுட்பங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நேரடி செயல்முறை விளக்கப் பயிற்சிகளை வழங்கினார்.

செயலமர்வின் இறுதிக்கட்டத்தில் பங்குபற்றிய இளம் பெண்களுக்கான விசேட சமையற்கலைப் போட்டியொன்றும் நடாத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு எடின்பரோ நிறுவனத்தினால் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக தலைப்பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சன்றைஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சமையற்கலை நிபுணருமான ஏ.வி.எம். நளீம், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், பிரபல அறிவிப்பாளர் எம்.வி.எம். நிம்சான் உட்பட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பல இளம் பெண் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘போ@தைப்பொருள் லேகியம்’ விற்பனை : சந்தேக நபர்  கைது!

ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை  இன்று (13) பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

43 0 0
இலங்கை செய்திகள்

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சட@லம் அடையாளம் காணப்பட்டது!

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது: சாய்ந்தமருது இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு நீதவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை அம்பாறை…

63 0 0
இலங்கை செய்திகள்

கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு! அக்கரைப்பற்று, செப். 13ஜே.கே.யதுர்ஷன் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ…

60 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தத்துக்கு எதிராக செப். 24 கொழும்பில் ஆர்ப்பாட்டம்

படங்கள், வீடியோ இணைப்பு – 22 ஆவது திருத்தத்துக்கு எதிராகசெப். 24 கொழும்பில் ஆர்ப்பாட்டம் அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி வழியிலான…

20 0 0