உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
46 பார்வைகள்

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும் இன்று (12) நடைபெற்றது.

கிளிநொச்சி அக்கராயன் குளம் பகுதியில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையின் ஏற்பாட்டில் தோமாஸ்கோ சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் 247 சிறுவர்களை உள்ளடக்கிய வகையில் இன்று மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் முன்னதாக சிறுவர்கள், பெற்றோர்கள் இணைந்து அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவசியம் எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி அக்கராயன் சந்தியில் இருந்து விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்தனர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்ற அரங்கில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துரைகளும் விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றன.

இதில் மதத்தலைவர்கள், சிறுவர், பாதுகாப்பு உத்தியோகத்தர், பெற்றோர்கள், ஆசிரியர்கள், துறை சார்ந்த திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும்…

60 0 0
இலங்கை செய்திகள்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்…

46 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றின் மீது கவிழ்ந்த பாரவூர்தி.!

பதுளை – மஹியங்கனை வீதியில், மடித்தலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தை அவரது மகன் மற்றும்…

39 0 0
இலங்கை செய்திகள்

மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பு.!

கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களை தெளிவூட்டும் ஊடக சந்திப்பை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஏற்பாடு…

42 0 0