உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
117 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் கனிம வளங்கள் மற்றும் வனப்பகுதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இன்று வெள்ளிக்கிழமை (11) மதியம் மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில்,பிரதி அமைச்சரும் மன்னார் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வனவளத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 48 மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள், மல்வத்து ஓயா சார்ந்த பகுதிகளில் இடம்பெற்ற மணல் அகழ்வு, பிரதேச செயலகங்களுக்கும் வனப் பாதுகாப்புத் திணைக் களத்திற்கும் இடையிலான அதிகார வரம்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், மணல், மற்றும் கல் அகழ்வுக்கு அனுமதிகளை முறையானதும் விஞ்ஞானபூர்வமான துமான நடைமுறையின் கீழ் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, அண்மையில் மன்னார் மாவட்டத்தின் கிராமிய வீதிகளை புனரமைப்பதற்கான பயன்படுத்தப்பட்ட 1,302 கன மீற்றர் மணலுக்கு வரி அறவிடுவது தொடர்பான பிரச்சினை, வெள்ளாங்குளம் பகுதியில் காணப்படும் 3,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில், எதிர்காலத்தில் அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி மட்டத்தில் கொள்கை ரீதியான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து : நால்வர் காயம்!

கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு நேற்றிரவு எட்டு மணியளவில் டிப்பர் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் எரிபொருளை நிரப்பிய பின்பு வாகனத்தை முன்னோக்கி விடுமாறு…

122 0 0
இலங்கை செய்திகள்

பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி 21 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின்…

106 0 0
இலங்கை செய்திகள்

இந்திய முகாமில் இருந்து தனித்து இலங்கை திரும்பிய 17 வயதுச் சிறுவன் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு!

தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத் தலைமன்னார் பொலிஸாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

127 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர்…

80 0 0