யானை தாக்கி ஒருவர் உ*யிரிழப்பு.!
கொடவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ குளத்திற்கு அருகில் காட்டுயானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாகக் கொடவெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெல்லகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபர் ஒருவரே இத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் இரவு நேரத்தில் குள பகுதிக்குச் சென்ற போது வீதியில் நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அதன் பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் கோட்டவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.