உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

சிங்காரவத்தை தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் அச்சுறுத்தல்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
99 பார்வைகள்

பொகவந்தலாவ சிங்காரவத்த தோட்டம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தேயிலை மலையில் 09.09.2026.புதன்கிழமை காலை சிறுத்தை புலி ஒன்று இனங்கானப்பட்டுள்ளது

இதன் காரணமாக குறித்த பகுதியில் தொழிலுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்

நேற்றையதினம் காலை வேளையில் குறித்த சிறுத்தை புலி தேயிலை மலையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்ததை பொதுமக்கள் இனங்கண்டு தமது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பில் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

இதேவேளை பொகவந்தலாவ தெரேசியா தோட்டம் பகுதியில் கடந்தவாரம் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இதேவேளை இந்த தோட்ட பகுதியில் சிறுத்தை புலியின் நடமாற்றம் காரணமாக வளர்ப்பு நாய்களும் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

இந்த விடயம் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் கவனம் செலுத்தி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிங்காரவத்தை தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் சிலோன் மீடியா போரம் உயர்மட்டக் கலந்துரையாடல்

“இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்” (Sri Lanka Journalists’ Trust Fund) ஸ்தாபிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று (10) வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ…

106 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தாமதம் : தெரிவுக்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த எதிரணி

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர். நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான…

90 0 0
இலங்கை செய்திகள்

இந்து மதகுருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த…

99 0 0
இலங்கை செய்திகள்

தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து!

குருநாகல் – கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப் பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த…

123 0 0