உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை!

இந்திய செய்திகள் 5 மணி நேரம் முன்
114 பார்வைகள்

இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றப் பதிலுரையின் போது பேசிய அவர், இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்ட ஒரே அரசு தமது தமிழக வெற்றி கழக அரசுதான் எனக் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் பல அவமானங்களைச் சந்தித்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், இனி பெண்கள் எந்தப் பிரச்சனையையும் சந்திக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், எந்தவொரு பெண்ணும் அவமானப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அரசியலுக்காகத் தனிப்பட்ட முறையில் மக்களையோ அல்லது பெண்களையோ தரம் தாழ்த்திப் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அவர், தமிழ்நாட்டில் ஆபாச நதியா, வன்ம நதியா ஓடுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

நம் வீட்டில் தாய், அக்கா, தங்கச்சியாக இருப்பது அதே பெண்கள்தான் என்பதை மனதில் வைத்துப் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு

தமிழகச் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்துப் பேசினார். முதலமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி…

79 0 0
இந்திய செய்திகள்

மகாராஷ்டிராவில் தயிர்ப்பானை உடைக்கும் போட்டியில் விபரீதம் – சிறுவன் உட்பட இருவர் பலி!

மகாராஷ்டிராவில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை காண்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இருந்த ஏழு வயது சிறுவன்…

135 0 0
இந்திய செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அநீதிக்கு எதிராக அறம் வெல்லும் என்றும், எத்தகைய சூழலிலும் கடமை…

79 0 0
இந்திய செய்திகள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், மீட்க முடியாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என…

90 0 0