உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

களு கங்கையில் நீராடச் சென்ற 19 வயது இளைஞர் மாயம் – தேடும் பணிகள் தீவிரம்

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
67 பார்வைகள்

களுத்துறை, ஹொரண – நாரகல பாலத்திற்கு அருகாமையில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று நண்பர்களில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

யால பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், கங்கையில் குதித்து நீந்த முயன்றபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு நண்பரும் நீரோட்டத்தில் சிக்கிய நிலையில், போராடி பின்னர் கரை சேர்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர்காப்புப் படையினர் களு கங்கையில் காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நீரோட்டம் மிகவும் வேகமாக இருப்பதுடன், முதலைகளின் நடமாட்டமும் அதிகமாகக் காணப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அச்சமடைந்த உள்ளூர் மக்களும், காணாமல் போன இளைஞரின் நண்பர்களும் நேற்றிரவு முழுவதும் கங்கைக் கரையில் தீ மூட்டி, இளைஞர் தொடர்பான தகவலுக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

16 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

47 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

31 0 0