பயாகல துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளி எரிந்த நிலையில் மீட்பு.!
பயாகல, கொஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உந்துருளி, தீ வைத்து எரிகப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உந்துருளி இன்று (01) காலை தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலதூவ பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (31) இரவு பயாகல பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினரான “பானந்துரே நிலங்க” என்பவரின் மைத்துனரான “டிலா” என அழைக்கப்படுபவர் ஆவார்.