உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

பல்கலைக்கழகங்கள் முடங்கும் நிலை; நாளை போராட்டம்.!

இலங்கை செய்திகள் 23 மணி நேரம் முன்
75 பார்வைகள்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

இதனால் பல்கலைக்கழக அமைப்பு முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சம்மேளனம், இதற்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால், முதற்கட்ட தொழிற்சங்க நடவடிக்கையாக நாளை நண்பகல் உணவு வேளையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முன்னால் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

இதன்பின்னரும் உரிய தீர்வுகள் எட்டப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப்போவதாகவும், இது அனைத்து மாணவர் சமூகத்தையும் பாதிக்கும் ஒரு விடயமாக அமையும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

16 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

47 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

31 0 0