உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

கடலில் மூழ்கி மாயமான சிறுவனின் ச*டலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 24 மணி நேரம் முன்
74 பார்வைகள்

ஜா-எல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின் சடலம் நேற்று (31) திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயார், அவரது மகள் உட்பட 4 பேர் பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக நேற்றையதினம் காலை மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதலில் 35 வயதுடைய தாய் மற்றும் 4 வயது மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாயமான சிறுவனின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்ததிலிருந்து பொலிஸாரும், கடற்படை மற்றும் அப்பகுதி கடலோர மீட்புக் குழுவினரும் இணைந்து எபமுல்ல கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

16 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

46 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

30 0 0