உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

போ*தைப்பொருட்களுடன் இளைஞன் கைது.!

66 பார்வைகள்

அஹுங்கல்ல, எலதொட்ட சந்தை வீதித் தடையின் போது ‘ஐஸ்’, ஹெரோயின் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துச் சோதனையிட்ட போதே இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து 01 கிலோகிராம் 194 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 217 கிராம் ஹெரோயின் மற்றும் 101 கிராம் 270 மில்லிகிராம் குஷ் ஆகிய போதைப்பொருட்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயம், கால்நடை,…

24 0 0
இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

37 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

19 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

48 0 0