உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

ஜோர்தான் தாக்குதல் குறித்து டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

உலக செய்திகள் 1 நாள் முன்
66 பார்வைகள்

அமெரிக்கப் படைகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Fox News ஊடகத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஜோர்தானை நோக்கி ஈரான் ஏவிய அனைத்து ஏவுகணைகளும் அமெரிக்காவால் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டன.

ஆபத்தை ஏற்படுத்தாத ஒரேயொரு ஏவுகணை மட்டுமே விலக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறினார்.

ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் அல்லது இலக்குகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அமெரிக்காவுடன் ஒரு சமரச ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பதாக ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் ‘லாராக்’ தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே, ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை இலக்கு வைத்து ஈரான் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காலநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவு, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக…

78 0 0
உலக செய்திகள்

சவூதியில் ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ நிரந்தர செயலகம்

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

41 0 0
உலக செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்க ராணுவ செயலாளர் பதவி விலகல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார். ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல், சுமார் 18 மாதங்கள் பதவி…

47 0 0
உலக செய்திகள்

நேபாள பேரழிவு: பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது. திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத்…

64 0 0