உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

சீன அதிகாரிகள் உரிய தகவல்களைத் தரவில்லை – நேபாளம் குற்றச்சாட்டு!

உலக செய்திகள் 58 நிமிடங்கள் முன்
32 பார்வைகள்

நேபாளம் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த மே 27 அன்று காத்மாண்டுவில் சந்தித்து பனிப்பாறை அபாயங்கள் மற்றும் வெள்ளப் பெருக்கு குறித்து விவாதித்துள்ளனர்.

எனினும் பனிப்பாறைகளின் இயக்கம் மற்றும் நீர்மட்டம் குறித்த கூடுதல் தரவுகளை சீனா உடனடியாகப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று நேபாள அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனினும் தாங்கள் உரிய நேரத்தில் மழை மற்றும் வானிலை முன்னறிவிப்புகளைப் பகிர்ந்து வருவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், தொலைதூர மலைப்பகுதியில் உள்ள ஆபத்துகளைக் கண்காணிப்பதில் சவால்கள் இருப்பதாக சீனத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரழிவின் போது நீர்மட்டத் தரவுகள் உடனடியாகக் கிடைக்காததால் எச்சரிக்கை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக நேபாள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், உயிர்களைக் காக்க இந்தியாவுடன் உள்ளது போல சீனாவுடனும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தரவுகளைப் பகிர்ந்துகொள்ளும் முறையான ஒப்பந்தத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் குறிப்பிட்0டுள்ளனர்.

இதேவேளை, உலக வெப்பமயமாதல் காரணமாக இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகிவருவதே இதுபோன்ற கோர விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக் கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக…

49 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 700 ஐ தாண்டியது

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இதன்படி, குறித்த பேரழிவில் நேபாளத்தில் 700-க்கும் மேற்பட்டோரும், சீனாவில் 16-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.…

63 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

இமயமலைத் தொடரில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்ததால் நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த…

54 0 0
உலக செய்திகள்

ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா

ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ ஸ்பெயின் – கோலாகலமாக நடைபெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர். வருடந்தோறும்…

83 0 0