விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!
ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
ஜனநாயக தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார், பிரதி செயலாளர் உமா கரந்தகொல்ல ஊடக கையளிக்கப்பட்ட இந் நிகழ்வில் மடக்கும்புர பகுதியை சேர்ந்த 150 பயனாளர்களுக்கு குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ஜனநாயக தேசிய கூட்டணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் சிந்தாமணி மாரிமுத்து கொத்மலை அமைப்பாளர் சண்முகநாதன் மனோ உட்பட பயனாளர்கள், தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



