ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் உதவி வழங்கி, உயிர்நாடியாகச் செயற்படும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் மிகக் கடுமையான பொருளாதார விளைவுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானை முழுமையாகத் தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.