உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாட்டின் சிறைகளையே நிர்வகிக்க முடியாத அரசால் ஒட்டுமொத்த நாட்டை எவ்வாறு நிர்வகிக்க முடியும்?

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
86 பார்வைகள்

தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின் சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறைக்குள் இருக்கும் கைதிகளையோ அல்லது சிறைச்சாலை அமைப்பைக் கூட முறையாக நிர்வாகிக்க முடியாத தற்போதைய அரசால், ஒட்டுமொத்த நாட்டையும் அதன் மக்களையும் எவ்வாறு பாதுகாத்துச் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என்பதை மக்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இத்தகைய வன்முறைகளும் மோதல்களும் இடம்பெறுவது வெறும் நிர்வாகத் திறமையின்மையா அல்லது இதன் பின்னணியில் அரசின் மறைமுகச் சதித்திட்டம் எதுவும் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

நாட்டில் நிலையற்ற சூழலை உருவாக்கி, அதைக் காரணம் காட்டி அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டுவதற்கும் அரசே இவ்வாறான சூழல்களைப் பயன்படுத்துகின்றதா என்ற கோணத்திலும் கேள்விகள் எழுகின்றன.

சிறைச்சாலைகளில் இத்தனை சட்ட ஒழுங்கு மீறல்களும் அசம்பாவிதங்களும் நடந்தேறிய பின்னரும், அதற்குப் பொறுப்பான துறைசார் அமைச்சர் தனது பதவியை இராஜிநாமா செய்யாமல் தொடர்ந்து நீடிப்பது பெரும் கேள்வியை எழுப்புகின்றது.

அமைச்சர் பதவி விலகாமல் இருப்பதன் மூலம், சிறைச்சாலைக்குள் நடக்கும் இத்தகைய மோதல்கள் அவருடைய முழு அறிவோடும் விருப்பத்தோடும் தான் நடக்கின்றனவோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களோ அல்லது வழக்கு விசாரணை முடிவடையாமல் பிணை மறுக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களோ, சிறை வளாகத்துக்குள்ளேயே மரணமடையும் அல்லது கொல்லப்படும் ஆபத்தான சூழல் நிலவுவது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறைக்கும் விழுந்த பேரிடியாகும்.

தவறு செய்தவர்களுக்குச் சட்டப்படி நீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டுமே தவிர, சிறைச்சாலைகளுக்குள்ளேயே அவர்களுக்கு மறைமுக மரண தண்டனை கிடைக்கும் நிலைமை உருவாகக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு தனது உண்மையான நிலையை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

54 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

52 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

62 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

85 0 0