உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் பின்னணி!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
105 பார்வைகள்

பொரள்ளை புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (06) நள்ளிரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

வெளியில் இருந்து சிலர் சிறைச்சாலை வளாகத்திற்குள் எறிந்த ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்ற சம்பவத்தை மையமாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

அச்சமயத்தில் ஒரு குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் சிறைக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் “கொஸ்மல்லி” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் உதவியாளர்கள் எனக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைதியின்மையில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயில் வழியாக வெளியேற முயன்றபோது, நிலமையைக் கட்டுப்படுத்தச் சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாகப் போராடியுள்ளனர்.

இரு குழுக்களுக்குமிடையே ஏற்பட்ட இந்த மோதலின் போதே ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவன பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்டீன் (35 வயது) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இவர் கல்கிஸை வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைப் கொலை மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டைப் கொலை உட்படப் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.

மேலும், “ஹோமாகம ஹந்தயா” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கூலிப்படை துப்பாக்கிதாரியாக பணியாற்றியதாகக் கூறப்படும் இவருக்கு எதிராகக் காலி, அம்பாறை, நீர்கொழும்பு, ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அத்துடன், கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலைச் சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபராகவும் இவர் ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 கைதிகள் சிகிச்சைக்காகச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மோதலை வழிநடத்தியதாகக் கருதப்படும் 9 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

55 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

52 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

62 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

85 0 0