உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீர்கொழும்பு சிறைக்கலவரம் தொடர்பாக கிடைக்கப் பெற்ற சாட்சியங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
67 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த தலைமை சிறை அதிகாரி இன்று (30) நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் அவர் சாட்சியமளித்தார்.

சம்பவத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாகப் பணியாற்றிய விக்ரம ஜயந்த குமார என்பவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சாட்சியப் பதிவு, பிற்பகல் 3.00 மணி வரை நீடித்துள்ளது.

சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர் கருத்து தெரிவித்த நீதவான், தலைமை சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தகவல்கள் உள்ளடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

அத்தகவல்கள் வெளிவரக் கூடுமாயின் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அச்சாட்சியின் உள்ளடக்கங்களை எந்தவொரு ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அச்சாட்சியத்தைப் பாதுகாப்பாக வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்ற 89 சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பான அறிக்கையொன்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

51 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

59 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

46 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

67 0 0