சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை மனு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது