வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான உந்துருளி; ஒருவர் உயிரிழப்பு.!
புல்மோட்டை – திருகோணமலை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) புதன்கிழமை மாலை வேளையில் புல்மோட்டை நோக்கிப் பயணித்த உந்துருளி கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.
சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.