துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது.!
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான, பள்ளியாவத்தை பகுதியில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி விருந்து ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் சீதுவை, முக்கலங்கமுவ பகுதியில் வைத்து நேற்று (29) புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சீதுவை, முக்கலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஆவார்.
மேல் மாகாண வடபிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாடகைக் காரைப் பெற, தனது வங்கிப் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் செய்து இக்குற்றத்திற்கு உதவியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடபிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.