உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தைச் சிறப்பித்த பிரதமர் ஹரிணி!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
86 பார்வைகள்

கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன் கோயிலின் வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் அலரி மாளிகைக்கு முன்பாக வருகை தந்தது. இதன்போது வேல் ஊர்வலத்துக்குப் பிரதமர் அலுவலகத்தின் சார்பாகப் பூஜை வழிபாடுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

அலரி மாளிகையிலிருந்து பாரம்பரிய மேளவாத்தியங்கள் முழங்கப் பிரதமர் வேல் இரதத்தின் முன்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வேல் இரதத்தில் எழுந்தருளியிருந்த முருகப்பெருமானின் திருவுருவச் சிலைக்குப் பிரதமர் பழத்தட்டைப் பூஜையாகச் சமர்ப்பித்து, சமய வழிபாடுகளில் ஈடுபட்டுத் தெய்வ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, வேல் ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பிரதமரின் இந்தப் பங்கேற்பைப் பாராட்டும் வகையில் அவருக்கு மாலை அணிவித்துப் பொன்னாடை போர்த்தித் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன் கோயிலினால் வருடாந்தம் நடத்தப்படும் 152 ஆவது வேல் ஊர்வலமே இம்முறை நடைபெறுகின்றது. இந்த வருடாந்த ஆடி வேல் மகோற்சவமும் இரதோற்சவ விழாவும் 1874 ஆம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0