உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

காட்டுக்குள் மக்களை குடியமர்த்த திட்டம்; அதிகாரி மீது குற்றச்சாட்டு.!

குற்றம் 13 மணி நேரம் முன்
65 பார்வைகள்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. டென்சியா கிரிதரன் தொடர்பில் தினகரனுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள காணிகளை மக்களுக்கு பயனுள்ள இடத்தில் வழங்காமல் புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கோம்பாவில் திம்பிலி எனும் காட்டுப் பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணிகளுக்குப் பதிலாக புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் உள்ள காணிகளை அல்லது புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் செல்லும் வீதியில் அமைந்துள்ள வெண்புறா என அழைக்கப்படும் யுத்தத்தின் பின்னர் இராணுவ முகாமாக்கப்பட்ட அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கினால் போக்குவரத்து, மருத்துவம், கல்வி, வங்கிச் செயற்பாடுகள் போன்ற அனைத்து வசதிகளையும் இலகுவாக பெற முடியும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடங்களில் காணிகளை வழங்கினால் புதுக்குடியிருப்பானது பொருளாதார மற்றும் சமூக ரீதியாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடையும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. டென்சியா கிரிதரனிடம் கேட்ட போது “தாங்கள் தருவது தான் காணி இல்லையெனில் காணி இல்லை” என மிரட்டல் தொனியில் கூறியுள்ளார். இதனால் அவருடன் கதைக்க மக்கள் பயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு இதற்குரிய தகுந்த தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

அமைச்சர் சந்திரசேகரன் ‘கருப்பு பணத்தில் கவுண்டமணி சீனு’ பரபரப்பு!

ஒஸ்லோ, ஜூலை இருபத்தேழு, நார்வே தமிழ் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், இலங்கை மீன்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள், நார்வேயில் நடத்திய உத்தியோகபூர்வ பயணத்தின்…

26 0 0
குற்றம்

புதுக்குடியிருப்பில் வீதியை ஆக்கிரமித்துச் சட்டவிரோத கட்டிடம்:அதிகாரிகள் மௌனம் காப்பதாக மக்கள் கொந்தளிப்பு!

புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கா வீதியும் பாண்டியன் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியான மாம்பழம் சந்தி என்று பலராலும் கூறப்படும் சந்தியில் புதுக்குடியிருப்பு முன்னாள் தவிசாளர்ஆ. தவக்குமார் அவர்களின் மச்சானான…

679 0 0
குற்றம்

PickMe, Uber சாரதிகள் மீது தொடரும் கொடூர தாக்குதல்கள்!

கடந்த சில நாட்களாக PickMe மற்றும் Uber செயலிகள் மூலம் சேவையாற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் மீது முச்சக்கரவண்டி சங்க சாரதிகள் தாக்குதல் நடத்துவதும், பொது வெளியில் தகாத…

147 0 0
குற்றம்

மீற்றர் வட்டிக் கொடூரம்; அடாவடித்தனமாக பெருமளவு சொத்துக்கள் பறிப்பதாக முறைப்பாடு.!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு, கருமாரி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த ரகுவரன் என்பவர் மீது மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குதல், பணத்தை மீள வழங்காதவர்களை அச்சுறுத்தல், சொத்து அபகரிப்பு…

661 0 0