உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் ஒன்று வெடித்துச் சிதறியதாகத் தகவல்!

உலக செய்திகள் 15 மணி நேரம் முன்
47 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கன்னிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அங்கீகரித்த நீர்வழிப்பாதையை பின்பற்றாமையே இதற்கு காரணமாகும் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈரானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு இன்றி பயணித்த போதே குறித்த எண்ணெய் தாங்கி கப்பல் வெடித்துச் சிதறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஈரான் அறிவித்த பாதையிலிருந்து கப்பல்கள் விலகிச் சென்றால், அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இஸ்லாமிய குடியரசான ஈரான் இதற்கு முன்னரும் பலமுறை எச்சரித்திருந்தது.

இதற்கு முன்னர், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) சில கப்பல்களைத் தடுத்து நிறுத்தியபோது அல்லது தாக்கியபோது, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பலும் ஈரானிய அதிகாரிகளுடன் முழுமையான ஒருங்கிணைப்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

அத்துடன் ஈரானிய அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட பாதைகள் வழியே அவை செல்ல வேண்டும் என்றும் அறிக்கைகள் வௌியிடப்பட்டிருந்தன.

அவ்வாறு விலகிச் சென்ற கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்தே மீண்டும் அமெரிக்க – ஈரான் போர் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் 13 நாட்கள் தொடர்ந்தும் நீடித்த இந்த போரானது வார இறுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

2036-க்குள் பணத்தின் தேவை குறையும்?

2036-ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்தின் தேவையே பெருமளவில் குறைந்துவிடும் என தொழில்நுட்பத் தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித வடிவ…

73 0 0
உலக செய்திகள்

அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தினால் ஈரானும் தாக்குதல்களை நிறுத்தும்!

அமெரிக்கா தாக்குதல்களை நடத்தாமல் இருக்கும் வரை ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் என்று ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி…

65 0 0
உலக செய்திகள்

கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்!

கெமரூன் நாட்டின் டூவாலா நகரில் அமைந்துள்ள நியூ பெல் சிறைச்சாலை, ஒரு தனி நகரைப் போலச் செயல்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமான நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த…

87 1 0
உலக செய்திகள்

பிரான்சில் கட்டுக்கடங்காது பரவும் காட்டுத்தீ!!

பிரான்சின் தென்மேற்கு நகரமான போர்டோவை (Bordeaux) நோக்கி காட்டுத்தீ நெருங்கி வருவதால், பிரான் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் திங்கள்கிழமை (27) அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார். போர்டோ…

48 0 0