கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!
கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையிலும், செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் இலங்கையில் தமிழர்கள் மீது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூர்ந்து, நீதியையும் பொறுப்புக் கூறலையும் வலியுறுத்தும் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது
இந்தப் போராட்டம் தமிழீழ சுய நிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
இதன் போது குறித்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்களும் கலந்து கொண்டுள்ளனர்.




