உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

தமிழ் – முஸ்லிம் பேரவை கூட்டணியின் பிரதிநிதியாக இராதாகிருஷ்ணன் பெயரீடு.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
25 பார்வைகள்

தமிழ் – முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் கூட்டணியின் பிரதிநிதியாக, அதன் பிரதித் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினரான பரத் அருள்சாமியும் இப்பேரவையில் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், இராதாகிருஷ்ணன் எம்.பி.க்குத் துணையாகச் செயற்படுவார் என்றும் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ள அச்சங்கம், நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய…

21 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.!

பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; அப்பகுதியில் பரபரப்பு.!

கிளிநொச்சி, அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF)…

48 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்.!

பெல்லன்வில பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

45 0 0