சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 100 டொலர்களைக் கடந்துள்ளது!
வளைகுடாப் பகுதியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை மீண்டும் 100 டொலர்களை விஞ்சியுள்ளது.
இதனால், உலக சந்தைகள் ஆட்டம் கண்டதுடன், புதிய பணவீக்க அதிர்ச்சி குறித்த அச்சங்கள் மீண்டும் எழுந்தன.
இதன் விளைவாக, வெள்ளிக்கிழமையன்று (24) ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன.
ஈரானுடன் தொடர்புடைய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சவுதி எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்திய தாக்குதல்கள், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கான மத்திய கிழக்கின் இரண்டாவது முக்கியப் பாதையை முடக்கியதாலும் (ஏற்கனவே ஹார்முஸ் நீரிணையை ஈரான் கிட்டத்தட்ட மூடியிருந்த நிலையில்), பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரே இரவில் 7% உயர்ந்து இரண்டு மாதங்களில் இல்லாத அளவாக பீப்பாய் ஒன்றுக்கு 102 டொரை எட்டியது.
பின்னர் அது 100.85 டொலர் என்ற நிலையில் நீடித்தது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர்நிறுத்தம் நடைமுறையில் முறிவடைந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில், வெள்ளிக்கிழமை காலை வரை ஈரான் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
அதேவேளையில், அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள அண்டை அரபு நாடுகள் மீது ஈரானும் தாக்குதல்களை நடத்தியது.
மோதல் தணிவதற்கான அறிகுறிகள் ஏதுமின்றி நீடிப்பதால், இந்த மாதத்தில் மட்டும் ‘ப்ரெண்ட்’ Brent) மசகு எண்ணெய் விலை கிட்டத்தட்ட 40% உயர்ந்துள்ளது.