பிரதேச சபை வாகனம் பறிமுதல்: சாரதி மதுபோதையில் கைது.!
தேசிய மக்கள் சக்தியின் நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் வாகனத்தில், தே.ம.ச. உறுப்பினர் வசந்தன் மற்றும் சுயாதீன உறுப்பினர் ஜனாஷ்டன் ஆகியோர் நேற்று (24) மாலை பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் பகுதியில் பிரதேச சபை வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பொகவந்தலாவ பொலிஸாரால் வாகனம் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இரண்டு உறுப்பினர்களுடன் வாகன சாரதியும் மதுபோதையில் இருந்தமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சாரதி கைது செய்யப்பட்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.