PickMe, Uber சாரதிகள் மீது தொடரும் கொடூர தாக்குதல்கள்!
கடந்த சில நாட்களாக PickMe மற்றும் Uber செயலிகள் மூலம் சேவையாற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் மீது முச்சக்கரவண்டி சங்க சாரதிகள் தாக்குதல் நடத்துவதும், பொது வெளியில் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதும் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் முச்சக்கரவண்டி சங்க சாரதிகள் மீது பயணிகள் கோபத்தில் உள்ளனர்.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.