கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு.!
கிளிநொச்சி மாவட்ட பளை வண்ணாங்கேணி வடக்கு பகுதி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரான ஜெனீவன் மீது விவசாயிகளால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கமநல அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட காணிகளை விடுவிப்பதில் அவர் முட்டுக்கட்டையாக செயற்படுவதாகவும், இதனால் பல விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், அதன் காரணமாக வண்ணாங்கேணி வடக்கு பகுதி விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, இவரது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.