உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு.!

குற்றம் 2 நாட்கள் முன்
90 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட பளை வண்ணாங்கேணி வடக்கு பகுதி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரான ஜெனீவன் மீது விவசாயிகளால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கமநல அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட காணிகளை விடுவிப்பதில் அவர் முட்டுக்கட்டையாக செயற்படுவதாகவும், இதனால் பல விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், அதன் காரணமாக வண்ணாங்கேணி வடக்கு பகுதி விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, இவரது இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

புதுக்குடியிருப்பில் வீதியை ஆக்கிரமித்துச் சட்டவிரோத கட்டிடம்:அதிகாரிகள் மௌனம் காப்பதாக மக்கள் கொந்தளிப்பு!

புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கா வீதியும் பாண்டியன் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியான மாம்பழம் சந்தி என்று பலராலும் கூறப்படும் சந்தியில் புதுக்குடியிருப்பு முன்னாள் தவிசாளர்ஆ. தவக்குமார் அவர்களின் மச்சானான…

325 0 0
குற்றம்

PickMe, Uber சாரதிகள் மீது தொடரும் கொடூர தாக்குதல்கள்!

கடந்த சில நாட்களாக PickMe மற்றும் Uber செயலிகள் மூலம் சேவையாற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் மீது முச்சக்கரவண்டி சங்க சாரதிகள் தாக்குதல் நடத்துவதும், பொது வெளியில் தகாத…

86 0 0
குற்றம்

மீற்றர் வட்டிக் கொடூரம்; அடாவடித்தனமாக பெருமளவு சொத்துக்கள் பறிப்பதாக முறைப்பாடு.!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு, கருமாரி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த ரகுவரன் என்பவர் மீது மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குதல், பணத்தை மீள வழங்காதவர்களை அச்சுறுத்தல், சொத்து அபகரிப்பு…

523 0 0
குற்றம்

செம்மணியில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் இதுவரை 471 அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக நான்கு என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் பதினொன்று என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி…

84 0 0