உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளோம் – அமெரிக்கா அறிவிப்பு!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
70 பார்வைகள்

ஈரான் நெருக்கடிக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது என்றும், ஆனால் தெஹ்ரான் தரப்பு பேச்சுவார்த்தைகளில் தீவிரத்தன்மை காட்டவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

இதற்கிடையில், விரிவடைந்து வரும் மோதலானது உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளை பாதித்துள்ளது.

யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சவுதி மசகு எண்ணெயை ஆசியாவிற்கு ஏற்றிச் சென்ற மூன்று எண்ணெய் கப்பல்கள் செங்கடலில் தங்கள் பயணப் பாதையை மாற்றிக்கொண்ட மறுநாளே, தென்கிழக்கு ஆசிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் ரூபியோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய போரில், வளைகுடாப் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியுள்ள நிலையில், செங்கடலின் நுழைவாயில் பகுதியில் உள்ள கடற்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது திங்களன்று கடற்படை முற்றுகையை அறிவித்தனர்;

இதன் மூலம் இப்போரில் ஒரு புதிய முனையைத் திறக்கும் சூழல் உருவாகியுள்ளது.

வளைகுடாவிலிருந்து வெளியேறும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்து வருவதால், தினமும் மில்லியன் கணக்கான பீப்பாய் சவுதி எண்ணெய் வெளியேறுவதற்கு செங்கடல் முக்கிய மாற்றுப் பாதையாக இருந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா!

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக…

19 0 0
உலக செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 100 டொலர்களைக் கடந்துள்ளது!

வளைகுடாப் பகுதியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை மீண்டும் 100  டொலர்களை விஞ்சியுள்ளது. இதனால், உலக சந்தைகள் ஆட்டம் கண்டதுடன்,…

67 0 0
உலக செய்திகள்

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதட்டங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் “மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு” வலியுறுத்தி, அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு உலகளாவிய…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்கா பெரும் விலையைக் கொடுக்க வேண்டி வரும் : ஈரான் எச்சரிக்கை!

தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் “கள யதார்த்தங்களைப்” புறக்கணித்துவிட்டு, 2028 தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத்…

95 0 0