மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாமிமலை பெயர்லோன் தோட்ட சின்ன சூரிய கந்தை பிரிவில் வசிக்கும் மாரிமுத்து கந்தசாமி எனும் 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவர் இன்று காலை 9 .30 மணிக்கு பணிக்காக மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்ற போது அங்கு மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.