உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது. நடைபெற்றது.

மட்டக்களப்பு சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டிலும் பொன்தில் நிறுவனத்தின் அனுசரணையுடனும் இந்த பயிற்சிபட்டறை நடாத்தப்பட்டது.

இதில் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் கீழ் இயங்கும் 31 பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் 70 பேர் கலந்து தங்கள் பாடசாலை மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான பல புதிய விடயங்களை கற்பிக்கும் நோக்கில் இந்த பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.

இப்பயிற்சி பட்டறையில் பாலர் பாடசாலை மாணவர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் செயற்பாடாக சிறுவர் அபிவிருத்தி திட்டம் என்பது முக்கிய இடத்தினைக்கொண்டிருந்தது.

இந்த பயிற்சி பட்டறையில் 7 முக்கிய விடயங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் மிகவும் ஆர்வதுடன் செய்யப்பட்டனர் .

2027 ம் ஆண்டிற்கான புதிய செயற்பாடான ‘இந்த உலகினை புரிந்துகொள்வது’என்ற விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முக்கிய விடயமாகும்.

இந்த மூன்றுநாள் பயிற்சி பட்டறையில் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் டிலானி பன்டர் இங்கிலாந்தில் இருந்து வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும் ஓசன் ஸ்டார் லங்கா நிறுவனத்தின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

45 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

69 0 0