கிளிநொச்சியில் ” எல்நினோ ” காலநிலை தொடர்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தெளிவூட்டல்!
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கமக்காரர் அமைப்புக்கள் மற்றும் மீனவசங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் குறித்த கலந்துரையாடல் நடைபெந்தது.
ஏற்படப்போகும் எல்நினோ நிலையை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் K.அழகக்கோன், கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவசங்க பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தற்போதைய எல்நினோ நிலைமை தொடர்பாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.