உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் ஆல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் பரவலாக உணரப்பட்டு வருகின்றது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதப் பிற்பகுதியில் இலங்கையைச் சூழவுள்ள இந்து சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை 1.6 பாகை செல்சியஸ் அளவிலும், ஓகஸ்ட் மாதப் பிற்பகுதியில் அது 2.6 பாகை செல்சியஸ் அளவிலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலப்பகுதிகளில் வளி வெப்பநிலை 2.8 பாகை செல்சியஸை விடக் கூடுதலாக அதிகரிக்கக்கூடும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் எல்நினோவின் தாக்கத்தை துல்லியமாகக் கணிப்பது சவாலானது. ஏனெனில், இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்ணின் தொழிற்பாடு எல்நினோவின் செல்வாக்கை எந்தளவுக்கு அனுமதிக்கும் என்பதிலேயே பாதிப்பின் வீரியம் தங்கியுள்ளது.

இருப்பினும், தற்போதைய தரவுகளின்படி வரண்ட வானிலையைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்திலிருந்து மழை பெய்யத் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும்.

இந்த நிலைமை நவம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதுடன், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெள்ள இடரை ஏற்படுத்தக்கூடிய கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தக் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் மீன்பிடித் தொழிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே, இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலபோக (பெரும்போக) நெல் விதைப்பை விவசாயிகள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும்.

செப்டெம்பர் மாதம் வரை வரண்ட வானிலையும், ஒக்டோபர் மற்றும் நவம்பரில் வெள்ளப் பெருக்குடனான கனமழையும் எதிர்பார்க்கப்படுவதால், விழிப்புணர்வுடன் கூடிய முறையான திட்டமிடல் அவசியமாகும்.” – என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0