இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது.!
ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திவெவ பகுதியில், நேற்று (29) திங்கட்கிழமை தொல்பொருள் மதிப்புமிக்க செம்பு பாத்திரம் மற்றும் இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஜயந்திவெவ பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
புல்மோட்டை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஸ்ரீபுர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.