உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மக்களின் பணத்தைப் பிடுங்கி மக்களுக்கே கொடுக்கும் அரசு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, கடந்த 3 வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் மக்களின் உண்மையான வருமானம் எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை என்றும், மக்களிடமிருந்து வரியாகப் பெறப்படும் பணமே மீண்டும் கொடுப்பனவுகளாக வழங்கப்படுகின்றது என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

கேகாலை மாவட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“அஸ்வெசும, முதியோர் கொடுப்பனவு மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டவை அல்ல. இல்லாத ஒரு நிதியை அல்லது இருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட பணத்தையே அரசு மக்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளது. சுருக்கமாகக் கூறின், உங்களுக்கே வரி விதித்து, அந்தப் பணத்தை உங்களுக்கே திரும்பக் கொடுத்துள்ளார்கள். நாட்டில் புதிய செல்வம் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதை அரசால் சவாலுக்கு உட்படுத்த முடியாது.

மொத்த தேசிய உற்பத்தி, முதன்மைக் கணக்கு இருப்பு, வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் போன்ற பேரியல் பொருளாதாரம் சார்ந்த கருத்துருக்களைக் காட்டி அரசு தனது பொருளாதாரப் பொய்களை நியாயப்படுத்த முயல்கின்றது. ஆனால், பொருளாதார அறிவியலிலேயே இவை வெறும் தரவுகள் மட்டுமே தவிர, உண்மையான நிலைமை அல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உண்மையான பொருளாதாரம் என்பது தரவுகளில் இல்லை. அது நிலப்பரப்பிலும், உங்கள் வீடுகளிலும், உங்களின் பைக்கற்றுக்களிலும், நீங்கள் வேலை செய்யும் இடங்களிலுமே காணப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தை ஒரு பெரிய பூதமாகக் காட்டி, மக்கள் மீது விதிக்கக்கூடிய அனைத்து வரிகளையும் விதித்து, அதிகரிக்கக்கூடிய அனைத்துக் கட்டணங்களையும் அரசு அதிகரித்துள்ளது. சுங்க வருமானம் திடீரென அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றார்கள். நாம் பெரிய அளவில் ஏற்றுமதி வணிகத்தை மேம்படுத்தி இந்த வருமானத்தைப் பெறவில்லை, மக்களிடமிருந்தே இது வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொருளாதாரம் முற்றிலும் சுருங்கி, வணிகங்கள் இயங்காமல், மக்களின் கைகளில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்களின் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக மக்களைச் சுரண்டி, தங்களின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதே இவர்களின் நோக்கமாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0