புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் கொடியேற்றம்..!
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்றம் நிகழ்வு இன்றைய தினம் மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
செம்பியன்பற்று பங்கு ஜஸ்டின் ஆதர் தலைமையில் கொடியேற்ற வழிபாடுகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் இடம்பெற்றது.
கொடியேற்ற வழிபாட்டை தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமானது. பின்னர் திருவிழாவிற்கான நவநாள் திருப்பலியின் ஆரம்ப நாள் திருப்பலி வன பிதா ஜெயபாலன் அமலமரித்தியாகிகள் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த ஆன்மீக திருப்பலியில் இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



