உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

இலங்கை செய்திகள் 12 நிமிடங்கள் முன்
65 பார்வைகள்

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம்.

நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் சொகுசு AC பேருந்தில், நான்கு பேர் அமர வேண்டிய இருக்கையில் ஆறு பேர் அமர வைக்கப்படுவதாகவும், பேருந்து முழுவதும் பயணிகள் நெருக்கடியாக நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் நிலையில், அதற்கேற்ற இருக்கை வசதி, பயணிகள் நெரிசல் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பியபோது, பயணிகளுடன் முரண்படும் வகையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சொகுசு AC பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் நிலை இதுதானா கவனத்திற்கு கொண்டு வந்தனர் பயணிகள்.

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா
பேருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகள் ஏற்றப்படுகிறார்களா
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு யார் பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து ஏற்படும் பட்சத்தில் இதற்கு பொறுப்பு கூறுவது யார் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தனியார் போக்குவரத்து சங்கமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்த விடயத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பும், உரிய சேவையும் உறுதி செய்யப்பட வேண்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0