தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்து.!
ஹினிதும, ஹபரகடை பகுதியில் இன்று (17) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் 8 வயது சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியே காரைச் செலுத்தியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, விபத்துத் தொடர்பாகக் காரின் சாரதி ஹினிதும பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.