உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் குந்தியிருப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல் அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 32/2022 2.1.2 இன் படி 12 வருடங்களுக்கு மேலாக ஒரு மாகாணத்தில் கல்வி நிர்வாக அதிகாரிகளாக இருப்பார்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. 

 இவ்வாறு இருக்கையில் 19 வருடங்களாக 5 அதிகாரிகளும் 18 வருடங்களாக 3 அதிகாரிகளும் ஒட்டுமொத்தமாக 12 வருடங்களுக்கு மேல் 35 அதிகாரிகளும் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து சேவையாற்றுகின்றனர். 

இவ்வாறு இடமாற்றம் இன்று ஒரு பகுதியினர் தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் தங்கி இருப்பதால் வெளி மாகாணங்களில் இருந்து சேவை காலத்தை பூர்த்தி செய்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் வடக்கு மாகாணத்துக்கு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அது மட்டும் அல்லாது அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு கீழ் உள்ளவர்கள் பதவி உயர்வின் அடிப்படையில் உரிய பதவி நிலைகளை அடைவதில் கால தாமதங்கள் ஏற்படுகின்றது.

இவ்வாறான நிலையில் சுற்றறிக்கைகளை மீறி கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளாக தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் தங்கு இருப்பதால்  பழிவாங்கல்கள், நிர்வாக முறைகேடுகள் என்பன மேலோங்கி காணப்படும் அபாயங்களும் உள்ளன. 

 ஆகவே பொறுப்பு வாய்ந்தவர்கள் நிர்வாக சுற்றறிக்கைகளை உரிய முறையில் பின்பற்றி உரிய காலப் பகுதியில் இடமாற்றங்களை வழங்குவது ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0