கனமழை படிப்படியாகக் குறையும்.!
இலங்கையில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை, எதிர்வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவிக்கையில்,
“தற்போது நிலவி வரும் வளிமண்டலத் தொகுதியானது மிகவும் மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக மழையின் தீவிரமும் வேகமும் வரும் நாட்களில் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.
கனமழை குறைந்தாலும், மேற்கு மற்றும் தென்மேற்கு காற்றுத் தொகுதி காரணமாக மேல், சப்ரகமுவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
மிகக் கடுமையான மழை வீழ்ச்சி படிப்படியாகக் குறைவடைந்து வந்தாலும், வானிலை மாற்றங்கள் மற்றும் மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.” – என்றார்.