உந்துருளியுடன் – வாகனம் மோதி 25 வயது இளைஞர் பரிதாப உயிரிழப்பு!
அம்பாந்தோட்டை, பெலியத்தை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில், உந்துருளியில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை பெலியத்தை பகுதியில் உந்துருளியுடன், சொகுசு வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் போது பலத்த காயமடைந்தஉந்துருளியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய சொகுசு வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த விதம் மற்றும் சாரதியின் கவனக்குறைவு குறித்து பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.