உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பல ஆற்றுப் படுகைகளில் தற்காலிகமாக குறைந்த நீர்மட்டம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கனமழை காரணமாக முன்னதாக உயர்ந்திருந்த பல ஆற்றுப் படுகைகளில், கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாக, நீல்வலா ஆறு, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகல ஓயா போன்ற ஆற்றுப் படுகைகளில் தற்போது நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசணத் திணைக்களத்தின் நீரியல் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார குறிப்பிட்டார்.

எனினும், வரும் நாட்களில் குறித்த ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் மழைப் பொழவு அதிகம் பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதனால், தற்போதைய இந்த நீர்மட்டக் குறைவு தற்காலிகமானதாக இருக்கலாம் என்று அவர் எச்சரித்தார்.

இதனிடையே, நாட்டின் 73 பெரிய நீர்த்தேக்கங்களில் 18 தற்போது நிரம்பி வழிகின்றன, அதே நேரத்தில் 18 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் நீரை வெளியேற்றி வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

68 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0