• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடக்கின் நில உரிமைப் போரில் ; அவுஸ்திரேலிய அரசு ஆதரவுக் கரம்!

Bharathy by Bharathy
May 14, 2026
in இலங்கை செய்திகள்
0
வடக்கின் நில உரிமைப் போரில் ; அவுஸ்திரேலிய அரசு ஆதரவுக் கரம்!
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்தியூ டக்வொர்த்துக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும் கடற்றொழில் துறைகளின் மேம்பாடு, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள காணிப் பிரச்சினைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாணத்தின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவது குறித்தும், குறிப்பாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்ப்பது தொடர்பிலும் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், விவசாய விளைபொருள்களைப் பதனிடும் நிலையங்களை வடக்கில் விரிவுபடுத்துவதன் அவசியத்தையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடற்றொழில் துறையில் கடலுணவுகள், கடல் பாசி மற்றும் கடல் அட்டை போன்றவற்றுக்கான பதனிடும் தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். இதற்கமைவாக, விவசாய மற்றும் கடற்றொழில் உற்பத்திகளைக் கொள்வனவு செய்தல், பதனிடுதல் மற்றும் அவற்றுக்கான குளிர்சாதனக் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காகத் தனியார் முதலீடுகளை வடக்கில் ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலியத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

போர் நிறைவடைந்து பல ஆண்டுகளைக் கடந்த போதிலும், வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டது. குறிப்பாக, வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான பொறிமுறைகளின் முன்னேற்றங்கள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும், இடம்பெயர்ந்த மக்கள் தமது காணி உறுதிகள் மற்றும் ஆவணங்களை இழந்தமையால் தற்போது எதிர்கொள்ளும் சட்ட ரீதியான சிக்கல்கள் குறித்தும் ஆளுநர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் காணிப் பிரச்சினை தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டம் தொடர்பிலும் அவுஸ்திரேலிய தூதுவர் வினவி அறிந்துகொண்டார்.

அவுஸ்திரேலிய அரசின் சுமார் 4 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ், உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘வளர்ச்சிக்கான நிர்வாகம்’ என்ற திட்டத்தின் ஊடாக, வடக்கு மாகாணத்துக்குத் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், பொதுமக்களுக்குத் தேவையான அரச சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய ‘ஒற்றைச்சாளர’ முறையிலான சமூகப் பராமரிப்பு மையங்களை உருவாக்குதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகனின் நிர்வாக அனுபவங்களை அவுஸ்திரேலியத் தூதுவர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார். “வடக்கின் அடிமட்டப் பிரச்சினைகளை உங்களை விடச் சிறப்பாக வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது” என்று அவர் ஆளுநரிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய அரசின் இந்த நேர்மறையான அணுகுமுறைகளுக்கும், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அவர்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கும் ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகச் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச்சண்டை குழுவினர் தாயகம் திரும்பினர்!

by selvan
June 1, 2026
0

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் இன்றையதினம் பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்....

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் மரணம்.

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் மண் திட்டு சரிந்து விழுந்ததில் போதகர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று மாலை 5 30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில்...

திருக்கேதீஸ்வரர் ஆலய  வருடாந்த மகோற்சவத்தின்   தீர்த்தத் திருவிழா இன்று

திருக்கேதீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று

by selvan
May 30, 2026
0

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது. இன்று காலை வசந்த...

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

மட்டக்களப்பில் விபத்து – சிறுவன் உட்பட நால்வர் காயம்

by selvan
May 29, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் இந்த...

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

by selvan
May 29, 2026
0

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்களைத் தேடும் பணிகள் இன்று இரண்டாவது நாளாகவும் ஆழ்கடல் சுழியோடிகள் சகிதம் இடம்பெற்றன....

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

ஹட்டன் வலயக் கல்விக் காரியாலயத்தில் உத்தியோகத்தர்களின் வேதனம் இடைநிறுத்தம்?

by selvan
May 26, 2026
0

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36 உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்..தமக்கு எவ்வித முன்னறிவித்தலும்...

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

நுவரேலியாவில் நீர்த்தேக்கங்கள் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.

by selvan
May 26, 2026
0

மத்திய மலைநாட்டில் நுவரேலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக  நுவரேலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர்...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்பு!

by selvan
May 23, 2026
0

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.தமிழகம் இராமேஸ்வரம்...

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம் – சஜித்

by selvan
May 23, 2026
0

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி