மட்டக்களப்பில் சூடுபிடித்துள்ள புத்தாண்டு வியாபாரம்.!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், மட்டக்களப்பு நகரில் புத்தாண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு நகரைச் சூழவுள்ள பல்வேறு பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான மக்கள், தமக்குத் தேவையான ஆடைகள், புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகருக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.
மட்டக்களப்பு நருக்கு அதிகளவான மக்கள் வருகையினை முன்னிட்டு விசேட போக்குவரத்துகளை இலங்கை போக்குவரத்துச்சபை, தனியார் பேருந்து என்பன முன்னெடுத்துள்ளன.
அதேபோன்று நகரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நகருக்கு வரும் மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் மாநகரசபையினால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல்வேறுபட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதிகளவான மக்கள் புத்தாண்டை வரவேற்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்னறது.



