உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்; சஹ்ரானே பிரதான சூத்திரதாரி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் என்பது தர்க்க ரீதியாகவும், சாட்சியங்கள் ஊடாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவரால் எழுதப்பட்ட “உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ள மூளையைத் தேடி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் ஒரே மேடையில் கலந்துகொண்டமை அரசியல் அரங்கில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற போது ஆட்சியில் இருந்தவர்கள் மற்றும் அதன் பின்னரான விசாரணைகளை முன்னெடுத்தவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

உதய கம்மன்பிலவின் உரையில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள் வருமாறு:-
“இந்தத் தாக்குதலுக்காக சுமார் 30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான நிதியை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முஹம்மத் இப்ராஹிம் வழங்கியிருந்தார்.

வெடிபொருட்களைத் திரட்டியது, குண்டுதாரிகளைத் தெரிவு செய்தது மற்றும் தாக்குதலுக்கான இடங்களைத் தீர்மானித்தது என அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் சஹ்ரான் ஹாசீமே முன்னின்று கையாண்டுள்ளார்.”

இந்தத் தாக்குதலானது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தேவைக்காகவே சஹ்ரானால் முன்னெடுக்கப்பட்டது. நான் இங்கு வெளிப்படுத்தும் தகவல்கள் அமெரிக்க நீதிமன்றில் சாட்சியங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைகளைத் திசைதிருப்பச் சிலர் முயன்றாலும், சஹ்ரானே இதன் சூத்திரதாரி என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன.” – என்றார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள், அதன் பின்னாலுள்ள மர்மங்கள், குண்டுதாரிகள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்கள் மற்றும் குண்டுகள் தயாரிக்கப்பட்ட விதம் குறித்த பல இரகசியத் தகவல்களை இந்த நூலில் கம்மன்பில சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

65 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0