உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் சிக்கல்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தகைய நீர் விநியோகத் தடைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய வானிலை நிலவரத்தால் வரும் காலத்தில் 24 மணி நேரமும் தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பராமரிப்பது கடினமாகலாம் என்றும் அவர் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.

அம்பத்தளை உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தித் திறன் இதுவரை பாதிக்கப்படவில்லை என்றாலும், உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகம் ஏற்கனவே குறைந்த அழுத்த நிலையில் உள்ளது.

எனவே, பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சந்தன பண்டார, குறைந்த அழுத்த நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது டேங்கர் லொறிகள் மூலமாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

47 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

59 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0