உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நெருக்கடியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

இலங்கைக்கு அவசரகால எரிபொருள் உதவியை வழங்கிய இந்தியாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

“அவசரகால எரிபொருள் உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு நாங்கள் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உண்மையான உறவுகள் என்பது வசதியான காலங்களில் அல்ல, மாறாக நெருக்கடியான மற்றும் இக்கட்டான காலங்களிலேயே சோதிக்கப்படுகின்றன என்பதை இந்த உதவி மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகின்றது.

எமது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், எமக்குத் துணையாக நின்றவர்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.” – என்று சஜித் பிரேமதாஸ தனது பதிவில் மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஹரி ஆனந்த’ கப்பல் மூலம் 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ள நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

40 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0